• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

˙·٠•●♥♥●•٠·˙வலிகள்˙·٠•●♥♥●•٠·˙No -38

AgaraMudhalvan

Epic Legend
Chat Pro User
˙·٠•●♥♥●•٠·˙வலிகள்˙·٠•●♥♥●•٠·˙

images - 2025-02-06T113510.124.jpeg

பிரிவைத் தந்து நினைவு எடுத்துச் செல்ல முடியாது.

பிரிவு என்பது அப்போதைக்கு வலி. நினைவு என்பது காலமெல்லாம் வலி.

இதில் சில வலிகள் இன்பமானது,
சில வலிகள் துன்பமானது.

யார் தந்தார்கள் இந்த வலியை? நினைவுகளை யார் தரப் போகிறார்கள்?

இந்த வலியை நினைவுகளையும் விருப்பமில்லா விட்டாலும்,
சில வலிகளையும் நினைவுகளையும் விரும்பி ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

காலம் தான் அதை மாற்றி அமைக்கும் இல்லாவிட்டால் தக்க வைக்கும்.
 
FB_IMG_1740884415237.jpg

வலி தரும் சொற்கள் ஏனோ
முட்களை கொண்டே எழுதப் படுகின்றன போலும்.

அதை பார்க்கும் போதும் சரி
படிக்கும் போதும் சரி இதயத்தில் ஏனோ சுருக்கென ஒரு வலி வார்த்தையால் சொல்ல முடியாத படி.

யாரோ ஒருவர் தன்னை
ஏமாற்றியவரைப் பற்றி அவரிடம் பேச முடியாது தோற்று நிற்கும் போது.

எழுத்தை ஆயுதமாக பயன்படுத்தி அங்கே ஓர் போர்
களத்தையே நிகழ்த்தி அதில் அவரே வெற்றியும் பெற்றது போன்ற மன நிறைவோடு போய் விடுகிறார்.

அந்த கணத்தில் அவரது வலியும் கோபமும் அங்கே குறைந்த ஓர் சிறு ஆத்ம திருப்தி.

அங்கே யாரோ யாருக்காகவோ
எழுதிய வரிகளை வேறொருவர் வெவ்வேறு

சூழ்நிலையில் படிக்கும் போது
அதில் ஏதோ சில வரிகள்
இவர்களின் இதயத்தில் ஒரு
நெருடலை கொடுத்து விடுகிறது.

இங்கே யாரும் யாரை விடவும்
நல்லவர்கள் அல்ல நாம் எல்லோரும் ஒரு சாதாரண சாமானியர்களே.

தெரிந்தோ தெரியாமலோ
நாம் நிச்சயமாக
மற்றொருவருக்கு வலிகளை
கொடுத்திருப்போம்.

அது சில காலம் சென்ற பிறகுதான் அதை நாமே உணர்ந்தும் கொள்வோம்.

ஆனால் அதை திருத்தி எழுதவோ மாற்றி அமைக்கவோ
முடியாத படி காலமும் சென்றிருக்கும்.

இவ்வுலகில் எந்த மனிதனின்
உள்ளத்தில் சிறு துளி அளவேனும் ஒரு நெருடல் இல்லை என்பதை உரக்கச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.
 
FB_IMG_1740883669221.jpg


நமக்கு
யாதுமாகிப்போனவர்களைத்தான் அவ்வளவு இலகுவாக எடுத் தெறிந்து விடுகின்றோம்.

நாம் கொண்டாடித்தீர்த்தவர்களைத்தான்
அவ்வளவு இலகுவாக காயப்படுத்தி விடுகின்றோம்.

நமக்கு
உயிராகிப்போனவர்களைத்தான்
அவ்வளவு இலகுவாக வார்த்தைகளால் கொன்று தீர்த்து விடுகின்றோம்.

இத்தனைக்குப்பின்பும் நாம் ஏதோவொன்றில் உடைந்து நொறுங்கி நிற்கையில் அவர்களே நம் கரங்களை பற்றிக்கொள்கின்றார்கள்.

அவர்களே
நம்மை இறுக்கி அணைத்துக்கொள்கின்றார்கள்.

அவர்கள் தான் நமக்குரிய அத்தனை நேசங்களையும்
வலுக்கட்டாயமாக தாங்கிக்
கொண்டிருப்பவர்கள்.
 
Top