பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம்

நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்