MrNiceGuy
Favoured Frenzy

உன்னை நேசிப்பது தவறென்றால்,
என் இதயம் செய்த தவறு அது…
உன் பார்வை திருடிய நொடி முதல்,
என் தூக்கம் என்னை விட்டு போனது…
உன் பெயரை நினைத்த ஒவ்வொரு முறையும்,
என் மௌனம் கூட, ஒரு கவிதையாகிறது…
உரிமையில்லாத உறவென்றாலும்,
உணர்வுகளுக்கு ஏது எல்லை?
உலகம் இதை “கள்வனின் காதல்” என்றாலும்,
என் மனம் மட்டும்
“உண்மையான காதல்” என்றே சொல்கிறது…
கிடைக்க மாட்டாய் என்று தெரிந்தும்,
என் கனவுகளில் தினமும் வருகிறாய்…
முடிவில்லாத கதை என்று தெரிந்தும்,
உன் பெயரில்தான்
என் கவிதை ஒவ்வொரு முறையும் முடிகிறது…
உன் நினைவுகளில் தொலைந்தவன்,
இப்படிக்கு…
மகிழன்



