AgaraMudhalvan
Epic Legend
உன் இதழ் திறந்த
தருணம் பார்த்து
அழகாக எழுதி வைத்தேன்
இக்கவிதையின்
முதல் வரிகளை
உன் இமை அசைவுகளை
ரசித்து ரசித்து
எழுதி தீர்த்தேன்
இக்கவிதையின்
இரண்டாம் வரிகளை
நெற்றி மறைக்கும்
உன் கூந்தலின்
ஒரு கற்றை முடிகளை அழகாக
காதோரம் சொருகி வைப்பதை
பார்த்தபடி எழுதி வைத்தேன்
இக்கவிதையின்
மூன்றாம் வரிகளை
காற்றோடு கதைபேசியபடி
கைவிரல்களால்
ஓவியம் தீட்டி கொண்டிருந்த
உன் அழகினை கொஞ்சம்
சேர்த்து எழுதி வைத்தேன்
இக்கவிதையின்
நான்காம் வரிகளை
உன் விரல்களின் நகம் கடிக்கும்
இனிய தருணத்திலா எனக்கு
கிடைத்திட வேண்டும்
இக்கவிதையின்
ஐந்தாம் வரிகள்
உன் வீட்டு முற்றத்தில் படர்ந்திருந்த
பிச்சிப்பூவின் கொடியினில் அழகாக மொட்டுகளை கொய்கிறாய் நீ
இக்கவிதைக்கான
ஆறாம் வரிகளை
எழுத காத்திருந்த என் விரல்களில் இப்போது நீ நறுமணம் நிறைந்த
பூக்களாக மலர்ந்து போனாய்
மழையில் நனைந்தபடி
நடந்து வருகிறாய்
நதியென்று மழைக்கு குடைவிரித்திருக்கிறது என்ற கேள்வியோடு எழுதி வைத்தேன்
இக்கவிதையின்
ஏழாம் வரிகளை நான்
இக்கவிதையின்
எட்டாம் வரிகளுக்காக
காத்திருந்த எனக்கு
நீ துள்ளிக்குதித்து எட்டி அடித்த
கோவில் மணி ஓசையானது
என் நினைவுக்கு வந்தது
அதுவே மிகப் பொருத்தமாக அமைந்தும் போனது
வண்ணத்துப் பூச்சிகளோடு
நீ உரையாடி கொண்டிருந்த
ஒரு மாலை நேரப் பொழுதில்
தான் எழுதிக் கொண்டேன்
இக்கவிதையின்
ஒன்பதாம் வரிகளை
ஏதோ ஒரு காரணத்திற்காக
செல்லமாக அழுது கொண்டிருந்த எதிர் வீட்டு குட்டி தேவதையை
மெல்லமாக அள்ளியணைத்து
கன்னத்தோடு கன்னம் உரசி
கண்கள் மூடியபடி நீ கொடுத்த
முத்தத்தின் சத்தத்தோடு
நிறைவடைந்தது
இந்த கவிதையின்
பத்தாம் வரிகளும்
நான் உன்னைப்பற்றி
எழுதிட நினைத்த
பத்து வரிகளின் கவிதையும்!!!