Did you know that according to Chanakya Philosophy women with these qualities make wonderful wives?
ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையில் ஒரு துணை கண்டிப்பாக இருக்க வேண்டும். அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது திருப்புமுனையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாகும். அத்தகைய சூழ்நிலையில், வாழ்க்கைத் துணை சரியாக அமைந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகவும் கவனமான இருக்க வேண்டும். ஏனெனில் அவர் உங்கள் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்பவராக இருக்க வேண்டும்.

சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு, குடும்பத்தில் அவர்களின் உறவு எப்படி இருக்க வேண்டும், மகிழ்ச்சியைத் தர வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களைத் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, திருமணத்திற்கு முன் ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
மென்மையாக பேசுபவர்கள்
பெண்கள் மென்மையாக பேச வேண்டும் என்கிறார் சாணக்கியர். ஒரு பெண் இனிமையாக பேசக்கூடியவராக இருந்தால் அவர் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார். அத்தகைய பெண்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தருகிறார்கள். அவர்கள் தங்களின் திருமண உறவை முடிந்தவரை சிறந்த முறையில் கொண்டு செல்கிறார்கள்

பணத்தை சேமிப்பவர்கள்
சாணக்கிய நீதியின் படி பெண்கள் பணத்தைச் சேமிப்பவர்களாக இருக்க வேண்டும். இதைச் செய்பவர்கள் தங்கள் குடும்பத்தில் ஏற்படும் திடீர் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கலாம். எந்தவொரு குடும்பத்திற்கும் நிதி அடித்தளம் முக்கியமானது. எனவே நிதி விவகாரங்களைக் கையாளும் திறன் கொண்ட பெண்களை மனைவியாகப் பெறுவது குடும்ப நன்மைக்கு சிறந்தது.

பண்பாளர்கள்
நல்ல குணம் கொண்ட பெண்ணை மனைவியாக பெற்றால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும். பிரச்சினைகள் எழுந்தாலும் அவை மேகம் போல உடனே விலகிவிடும். நல்ல குணம் கொண்ட பெண்கள் தங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் அமைதியில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளனர்.

அமைதி
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்கள் வாழ்க்கைத் துணையின் தகுதி மற்றும் குறைபாடுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஆண்கள் தங்கள் மனைவியின் மனதின் நற்பண்புகளை மட்டுமே பார்க்க வேண்டும். ஒரு சரியான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதற்கான சரியான வழி அவர்களின் குணத்தைப் பார்ப்பதுதான், அவர்களின் தோற்றத்தை அல்ல. இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்குதான். ஆண்களையும் இதன் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும். பெண் துணையிடம் அமைதியும், பொறுமையும் தேவை. பெண்கள் பொறுமையாக இல்லாவிட்டால், வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் உங்களைக் கைவிடக்கூடும்.

கடவுள் நம்பிக்கை
பெண்கள் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதால் பெண்கள் கடவுள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இதன் மூலம் அவர்கள் சமநிலையை அடைந்து சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் திறனைப் பெறுகின்றனர்

உறவுகளை பிரிக்காதவர்கள்
உறவுகளைப் பிரிக்கும் பெண்ணுடன் ஒருபோதும் பழகக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகையவர்களுடன் உங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அவ்வாறு செய்வது உங்கள் வாழ்க்கையை விஷமாக்குகிறது. ஏனென்றால் அவர்கள் உங்களிடமிருந்து உங்கள் குடும்பத்தை பிரிக்கலாம்.

பொறுமையாக இருப்பவர்கள்
ஒரு பொறுமையான நபர் துன்பத்திலும் விடாமுயற்சியுடன் இருப்பார். வாழ்க்கைத் துணையிடம் பொறுமை என்ற குணம் இருப்பது அவசியம் என்கிறார் சாணக்கியர். ஏனெனில் கடினமான நேரங்களிலும் அவர்கள் உங்களுடன் இருப்பார்கள். கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க இது உதவும்
Zozo Ladies ithula unga character eppdinu solunga
ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையில் ஒரு துணை கண்டிப்பாக இருக்க வேண்டும். அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது திருப்புமுனையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாகும். அத்தகைய சூழ்நிலையில், வாழ்க்கைத் துணை சரியாக அமைந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகவும் கவனமான இருக்க வேண்டும். ஏனெனில் அவர் உங்கள் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்பவராக இருக்க வேண்டும்.

சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு, குடும்பத்தில் அவர்களின் உறவு எப்படி இருக்க வேண்டும், மகிழ்ச்சியைத் தர வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களைத் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, திருமணத்திற்கு முன் ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
மென்மையாக பேசுபவர்கள்
பெண்கள் மென்மையாக பேச வேண்டும் என்கிறார் சாணக்கியர். ஒரு பெண் இனிமையாக பேசக்கூடியவராக இருந்தால் அவர் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார். அத்தகைய பெண்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தருகிறார்கள். அவர்கள் தங்களின் திருமண உறவை முடிந்தவரை சிறந்த முறையில் கொண்டு செல்கிறார்கள்

பணத்தை சேமிப்பவர்கள்
சாணக்கிய நீதியின் படி பெண்கள் பணத்தைச் சேமிப்பவர்களாக இருக்க வேண்டும். இதைச் செய்பவர்கள் தங்கள் குடும்பத்தில் ஏற்படும் திடீர் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கலாம். எந்தவொரு குடும்பத்திற்கும் நிதி அடித்தளம் முக்கியமானது. எனவே நிதி விவகாரங்களைக் கையாளும் திறன் கொண்ட பெண்களை மனைவியாகப் பெறுவது குடும்ப நன்மைக்கு சிறந்தது.

பண்பாளர்கள்
நல்ல குணம் கொண்ட பெண்ணை மனைவியாக பெற்றால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும். பிரச்சினைகள் எழுந்தாலும் அவை மேகம் போல உடனே விலகிவிடும். நல்ல குணம் கொண்ட பெண்கள் தங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் அமைதியில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளனர்.

அமைதி
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்கள் வாழ்க்கைத் துணையின் தகுதி மற்றும் குறைபாடுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஆண்கள் தங்கள் மனைவியின் மனதின் நற்பண்புகளை மட்டுமே பார்க்க வேண்டும். ஒரு சரியான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதற்கான சரியான வழி அவர்களின் குணத்தைப் பார்ப்பதுதான், அவர்களின் தோற்றத்தை அல்ல. இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்குதான். ஆண்களையும் இதன் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும். பெண் துணையிடம் அமைதியும், பொறுமையும் தேவை. பெண்கள் பொறுமையாக இல்லாவிட்டால், வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் உங்களைக் கைவிடக்கூடும்.

கடவுள் நம்பிக்கை
பெண்கள் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதால் பெண்கள் கடவுள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இதன் மூலம் அவர்கள் சமநிலையை அடைந்து சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் திறனைப் பெறுகின்றனர்

உறவுகளை பிரிக்காதவர்கள்
உறவுகளைப் பிரிக்கும் பெண்ணுடன் ஒருபோதும் பழகக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகையவர்களுடன் உங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அவ்வாறு செய்வது உங்கள் வாழ்க்கையை விஷமாக்குகிறது. ஏனென்றால் அவர்கள் உங்களிடமிருந்து உங்கள் குடும்பத்தை பிரிக்கலாம்.

பொறுமையாக இருப்பவர்கள்
ஒரு பொறுமையான நபர் துன்பத்திலும் விடாமுயற்சியுடன் இருப்பார். வாழ்க்கைத் துணையிடம் பொறுமை என்ற குணம் இருப்பது அவசியம் என்கிறார் சாணக்கியர். ஏனெனில் கடினமான நேரங்களிலும் அவர்கள் உங்களுடன் இருப்பார்கள். கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க இது உதவும்
Zozo Ladies ithula unga character eppdinu solunga

